கர்த்தாவில் சந்தோசம் அவர் என் பெலன் - Karthavil santhosham avar en belan

கர்த்தாவில் சந்தோசம் அவர் என் பெலன்

பாரினில் வாழும் நாள் அவர் என் பெலன்

ஆவர் என் அடைக்ககலம் ஆறுதல்

என்னாளும் அவர் எந்தன் சர்வமுமே - 2

பல நாட்கள் எண்ணினேன் தனிமையென்று

அந்நாளில் அவர் என்னோடு சொன்னார் -2

உலகத்தின் முடிவுவரை எல்லா நாளும்

உன்னுடன் நான் இருப்பேன் -2

பெலவீனன் என்று நினைத்தேன் ஓர் நாள்

அந்நாளில் அவர் என்னோடு சொன்னார்- 2

எல்லாமும் செய்ய பெலன் தருபவர்

எப்போதும் கூட உண்டு - 2

சிநேகிதர் இல்லையென்றேன் ஓர் நாள் அந்நாளில் அவர் என்னோடு சொன்னார் - 2

நித்திய சிநேகத்தால் உன்னை நேசித்தவர்

நித்தமும் கூட உண்டு - 2

என்னால் எதுவுமே கூடாதென்றேன்

அந்நாளில் அவர் என்னோடு சொன்னார்- 2

எல்லாம் உனக்காக செய்து முடிப்பவர்

எந்நாளும் கூடிருப்பார்-2

கர்த்தாவில் சந்தோசம் அவர் என் பெலன் - Karthavil santhosham avar en belan

Karthavil santhosham avar en belan

Paarinil vaazhum naal avar en belan